பரீட்சை நேரம்

நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு, லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்த பழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை. தோல்விகளை சந்திக்க விருப்பம் இல்லை... அதுதான் என்ட வழமையான பழக்கங்களை மாத்த முயற்சிக்கிறதும் இல்லை.

என்னை போலவே ஒரு ஆள் முன்னால புக்கோட சண்டை போட்டுகொண்டிருந்ததை பார்த்தன். எங்கேயோ பார்த்த கைகள் அவை.. முன்னால புக்கஸ்ட் இருந்தபடியால் முகம் தெரியல... ஆர்வக்கோளாறு எனக்கு... ஏன் வீணா கஸ்டப்படுவான். எழும்பி மேலால பார்த்தன்.

ம்ம்ம்.. மன்னிக்கவேணும். இந்த இடத்தில ஒரு சின்ன பிளாஸ் பாக். நாலு வருசத்துக்கு முன்னால முதல் நாள் எக்கொனிமிக்ஸ் கிளாஸ்ல தடுமாறிய... தடுமாறவைத்த ஒரு பெண் தான் இப்ப முன்னால இருக்கிறது. வகுப்பில வாத்தி நித்திரை வர வைச்சதால... நோட்ஸை எடுத்து படிப்பம் வகுப்பு வேணாம் எண்டு அண்டே முடிவு பண்ணிட்டன். ஆனால் சில நேரங்கள்ல எண்ட முடிவை மறந்திட்டு கிளாஸுக்கு போய் இருக்கன். இந்தா.... இப்ப முன்னாடி இருக்காங்களே இவங்களை தரிசனம் பண்ணத்தான். முதல் நாள் கிடைச்ச அந்த பார்வை மனசில வந்தால் அன்னிக்கு நான் எக்கொனொமிக்ஸ் கிளாஸுக்கு போவன். ஆனால் நான் போன ஒரு சில நாட்களில் இவங்க வரல... எனக்கு ஏமாற்றம் தான் கிடைச்சுது. என்னைப் போலவே இவங்களும் கிளாஸுக்கு வந்து ஏமாந்திருப்பாங்களோ என்னவோ.. எனக்கு சொல்ல தெரியல... அவங்களும் என்னைப்போலவே அதே ஆர்வக்கோளாறில... என்னை பார்க்கணும் என்று வந்து ஏமாந்து பிறகு வரமாவிட்டாங்களோ என்னவோ... எனக்கு சொல்ல தெரியல.. மொத்ததில சொன்னால் அந்த முதல் நாள் கண் சந்திப்பில மனசில பதிந்த முகம்... அடிக்கடி பார்க்க தோன்றிய ஆனால் பார்க்கமுடியாத முகம் அது.

இதே மாதிரி போரட்டாம் அவங்களுக்குள்ளையும் இருக்குமோ என்று நினைத்ததுண்டு. கால ஓட்டம்... வெறு வேலைகளில் பிஸியாகிட்டன்.. இதையும் மறந்திட்டன்.

ஆனால் அண்மைல ஒரு பாட்டில கண்டனான்... முதல் நாள் பார்வை அப்படியே இருந்தது. ஆனால் வேறு யார்கூடவோ இருந்தபடியால் நானும் போய் கதைக்கல...

ஓக்கேங்க பிளாஸ் பாக் முடிஞ்சுது. இப்ப மீண்டும் லைபிரரி...

எப்படியாவது போய் கதைக்கலாமா என்று மனம் சொல்லிச்சுது. என்னை மாதிரியே இவங்களுக்கும் என்கூட கதைப்பதில் ஒரு பிடிப்பு இருக்குமோ? ஹும்ம்ம்.. எனக்கு தெரியல.. ஆனால் அன்னிக்கு பாட்டில பார்த்ததை நினைவுபடுத்தியபோது... கட்டாயம் இவங்களுக்கும் இருக்கும் என்று எண்ண தோன்றியது. சரி இனி புக்கில கண்போகாதே.... சரி நினைச்சதை செய்து முடிக்கலாம் என்று நினைச்சிட்டு தற்செயலா போவது போல போய்.. தற்செயலா பார்த்து ஆச்சரியப்பட்டது போல றாமா பண்ணினன். பரிசா ஒரு புன்னகை கிடைச்சுது... அதையே வைச்சுக்கொண்டு அருகே போனன்..

" எப்படி இருக்கிறிங்க?" என்று கேட்டன்.
"ம்ம்ம் நல்லா இருக்கன்.. நீங்க எப்படி? என்னை நினைவிருக்கா?"என்று பதில் வந்திச்சு.

ஆகா..... முதல்ல நடந்த மனப்போரட்டத்துக்கு விடை கிடைச்சுது.... இவங்களும் என்னை நினைச்சிருக்காங்க..

"மறக்க முடியுமா...." எண்டு சும்மா மேலால விட்டன்..

அப்படியே கதை தொடர இடையில மறிச்சு....

"ஒண்னு தெரியுமா இது லைபிரரி இங்கே கதைக்க கூடாது" என்றாள். எனக்கு கொஞ்சம் சப்பென்று இருந்தது. இருப்பினும் அதையே சாக்க வைச்சு

"ம்ம்ம்... தெரியும்... அப்ப கோப்பி ஸொப் போகலாமா? " என்று கதை விட்டேன்.

பதில் ஒன்னுமே தரல .... பரீட்சைக்கு படிப்பவள் ஆச்சே.. என்னை போலவா என்று நினைத்து விட்டு..

"நாளைக்காவது போகலாமா?" என்று கேட்டேன்.

ம்ம்.. பதில் இல்லவே இல்லை..என்ன நினைக்கிறாள் என்று அறியமுடியவில்லை... அதிகமாக ஏதோ கேட்டுவிட்டோமோ என்று இருந்தது.... சப்புக்கு மேல் சப்பென்று ஆகிவிட்டது எனக்கு.

ம்ம்... சரி இனி எப்படியாவது சமாளித்தாக வேணுமே....

"நாளைக்கு இல்லா விட்டால்.. புதன்?? வியாழன்?? வெள்ளி?? எப்போ போகலாம்? " சற்று கொமடி செய்வது போல் சமாளித்தேன்.

இப்போதும் பதில் இல்லை... புத்தகத்தை நோக்கி குனிந்தாள்... போகலாமா என்று நினைத்தவேளை..

" NOW " என்று எழுதிவிட்டு மேலே பார்த்தாள்.

ம்ம்ம்.. எதிர் பார்க்காத பதில் தான்.... இருப்பினும் " நாளைக்கு எக்ஸாம் ஆச்சே" என்று முக கூறியால் சொல்ல முற்பட்டவேளை...

"இன்று விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை.... நாளை எக்ஸாம் முடிந்ததும் நான் வீட்டுக்கு போகிறேன்" என்றாள்.

ம்ம்ம்..... "சரி போகலாமே....." என்று விருப்பமில்லாதவன்.. படிப்பில் அக்கறை உள்ளவன்.. ஆனால் நீங்க கேட்டதுக்காக என்ற மாதிரி முகத்தில ஒரு அக்ஸனை வரவச்சன்.

வெளில ஒரே மழை.. இங்க தானே பகலா இரவா என்று தெரியாத அளவுக்கு காலநிலை இருக்கும். கொப்பி ஸொப்பை நோக்கி நடந்தம்...

*************************************

மறுநாள் காலை... நான் எழும்ப லேட்டாகிட்டுது... எலாரம் அடிச்சது எனக்கு கேட்கல... அப்படி நல்ல நித்திரை. நேற்று மழைல நனைஞ்சது தலை ஓரமா இடிச்சுது. இனிக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் ஆச்சே... அப்படி ஒரு நினைப்பே இல்லாமல் எழும்புற மாதிரி இருந்தது. நோர்மலா என்றால் எக்ஸாம் டைம்ல எனக்கு எலாரம் அடிக்கு முதலே நித்திரை போய்விடும். ஆனால் இனிக்கு அப்படி இருக்கல...

கிடைச்சதை சாப்பிட்டுவிட்டு.. கிடைச்சதை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.. மனசுக்குள்ள ஒரு பட்டாம் பூச்சிங்க.. அது தான்.. செட்டைல வேற வேற கலர் எல்லாம் இருக்குமே அது தான்... பறந்திட்டே இருந்திச்சு... எல்லாம் நேற்றையான் நினைவால தான்.


அவசரமா போய் எக்ஸாம் ஃகோலுக்கை போனன். என்ட இடம் மட்டும் தான் காலி.. மற்ற எல்லோரும் ஆயத்தமா உக்காந்து இருந்தாங்க.. பேப்பர் குடுக்க ஆரம்பிச்சாச்சு... ஓரமா உக்காந்திருந்த அவளுக்கு கண்ணால ஒரு வணக்கம் வைச்சிட்டு எக்ஸாம் எழுத ஆரம்பிச்சன்.

எக்ஸாம் எல்லாம் எதோ எழுதினன்.... எக்ஸாம் முடிஞ்சு வெளில வந்தன்... வாசலுக்கு பக்கத்தில அந்த பொண்ணு நின்னிட்டு இருந்தா.. நான் வர ஒரு சிரிப்போட

"எப்படி எக்ஸாம்... நல்லா செய்திங்களா??" என்று கேட்டாள்...
"ஆமாங்க... நைட் படிச்சது எல்லாமே எழுதினன்" எண்டு கிண்டலா சொன்னன்.

அப்படியே கதை தொடர்ந்தது..... இடைல மறிச்சு..

"வாங்க இனிக்கும் கோப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாம்" என்று கேட்டன்.
" இனிக்குமா??" என்று சிரிச்சிட்டே கேட்டாள்.
"இல்லீங்க இது கோப்பி ஸொப் " அப்படி சொல்லிட்டு கோப்பி ஸொப்ல போய் உக்காந்தம்.

தனது பழைய ஹைஸ்கூல் கதைல இருந்து... குடும்ப கதைல இருந்து எல்லாமே சொன்னாள். டைம் போனதே தெரியல.. ரொம்ப ரொம்ப அலட்டினாள்.. ஆனால் எனக்கு அலட்டுற மாதிரி தெரியல... அவள்ட கதையை விட அவள் கதை சொல்லுற விதத்தை ரசிச்சிட்டு இருந்தன்.. மனசுக்குள்ள மறுபடியும் அதே பட்டாம்பூச்சிங்க...

பதிலுக்கு நானும் எண்ட கதைகள்ல கொஞ்சத்தை திருப்பி விட்டன். அப்படியே டைம் போட்டுது. எனக்கு இன்னும் ஒரு எக்ஸாம் இருக்கு... எண்டு நினைவு படுத்தினன். இருந்து கதைக்கலாம் போல இருந்தது.. ஆனால் எக்ஸாம் ஆச்சே மிஸ் பண்ணமுடியுமா??

" சொரிங்க.. நான் போகணும் எக்ஸாம் இருக்கு" டைம் நெருங்கிட்டதால எழும்பி நின்னுகிட்டே கதைச்சன்..

" உங்க வீடு எங்கே?? ஹொலிடே க்கு என்ன செய்ய போறிங்க??" என்று கேட்டாள்.

'இனிக்கு எக்ஸாம் முடிய 1வீக் இங்க தான் நின்னு ஏதாவது இன்ஜோய் பண்ணணும்.. அப்புறமா வீட்டை போறேன்... அங்கே போய் என்ன செய்கிறது என்று இதுவரை பிளான் இல்லை..' அப்படி என்று எண்ட வீடு இருக்கிற இடத்தையும் சொன்னன்.

தானும் இருக்கிறது அதே சிட்டி தான் என்று சொன்னாள்....

' இனிக்கு நைட் வீட்டை வருவேன் எண்டு வீட்டை போன் பண்ணி சொல்லிட்டன்' எண்டு சொன்னாள்... அதை எதோ சோகமா சொல்லுற மாதிரி எனக்குப்பட்டுது. அப்படி வீட்டை சொல்லாவிட்டால் நிண்டுவிடுவேன் என்று சொல்லுற மாதிரி இருந்திச்சு...எதோ சொல்லாமல் எனக்கு சொல்லுற மாதிரிப்பட்டுது....

' நாளைக்கு சேர்ந்தே விட்டை போகலாமே.. நில்லுங்களேன்' என்று கேட்கலாம் போல இருந்தது.

ஆனால் கேட்டு பதில் எப்படி வருமோ என்று நினைச்சிட்டு கேட்கல.... முதலும் நான் தானே கேட்டேன்.. இம்முறை அவள் கேட்டால் என்ன என்று கேட்கல.... அவளும் என்ன நினைக்கிறாள் என்று புரிய முடியல.... எக்ஸாமுக்கும் நேரம் நெருங்கீட்டு இருந்ததால

" ஹாவ் நைஸ் ஹொலிடே" எண்டு சொல்லிட்டு கையை குடுத்தன்..

ஏதும் எதிர் பார்ப்பதை சொல்லுவாளோ என்று பார்த்தன்..... ஹூம்ம்ம்... அப்படி ஒன்றையும் காணல.. எக்ஸாம் டைம் வந்திட்டதால அவசரமா விடை பெற்றுக்கொண்டு எக்ஸாம் போய் விட்டன்.

எக்ஸாம் முடிஞ்சு வந்து அங்க இங்க பார்த்தன்.. ஆள் நிற்குதா எண்டு.. லைபிரரி.. கோப்பி ஸொப்லயும் போய் பார்த்தன் காணவே இல்லை.. ' இந்த இயர் தான் எனக்கு கடைசி' என்று அவள் சொன்னது நினைவுக்கு வந்திச்சு.. ம்ம்ம்ம்.... இப்ப பெருசா பட்டாம் பூச்சி ஒன்னும் பறக்கல... வீட்டை பெல் பண்ணினன்... 'எனக்கு 1வீக் இங்க நிற்க இப்ப பிடிக்கல... இனிக்கு நைட் வீட்டை வாறேன்' என்று சொன்னன்.. பஸ் ஸ்டேசனுக்கு போய் பஸ்டைம் பார்த்தன்... அப்பதான் ஒரு பஸ் போயிருந்தது.. இதில தான் இவள் போய் இருப்பாள் என்று நினைச்சிட்டு அடுத்த பஸ்டைம்மை பார்திட்டு, ரூம் போனன்

அவசரம் அவசரமா எல்லாம் பாக் பண்ணினன்... லெட்டர் பொக்ஸ் பார்த்தப்ப ஒரு லெட்டர் இருந்தது.. எதிர்பாராத லெட்டர் அது....அவள்ட லெட்டர் தான்..

' 1 வீக்கால வீட்டுக்கு வந்ததும் பெல் பண்ணுங்க" எண்டு டெலிபோன் நம்பரும் இருந்தது.

ஆகா... இப்ப வீட்டை போக எனக்கு இன்னும் உற்சகாமா இருந்தது... பாக்கை எடுத்திட்டு கிளம்பினேன்... ஒன்னு சொல்லி அடிக்கடி அறுக்கிறேன் என்று நினைக்காதேங்க...

இப்ப மறுபடியும் பட்டாம்பூச்சிங்க......

(யாவும் கற்பனை)

முடிந்தது

Kallum Kaniyalaam

மகளும் மருமகனும் இப்பதான் கிளம்பி வீட்டை போறாங்க. ரண்டுபேரையும் அனுப்பிட்டு மரத்தடியில கிடந்த சாய்மனைல வந்து உக்காந்தன். என்ட மகளோட நான் பழகிற வாய்ப்பு எனக்கு கிடைச்சதில்லை. அது எனக்கு ஒரு கவலையாகப்பட்டது இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிட்டினதுக்காக நான் சந்தோசப்படுறன். அதுக்காக 'இந்தவாய்ப்பை எனக்கு தந்தது கடவுள் தான், கடவுளுக்கு நன்றி' என்று சொல்ல மாட்டன். எனக்கு கடவுளை எனக்கு பிடிக்கிறதில்லை. அப்படி நன்றி சொல்லுறது என்றால் ஆமிக்காரங்களுக்கு சின்ன நன்றி சொல்லலாம். மகள்ட இடத்தில ஆமிபிரச்சினையாம். ஆமி உள்ள வந்தால் இளமாக்களுக்கு பிரச்சினை என்று இடம் பெயர்ந்ததால தான் எனக்கு இந்த குறுங்கால சந்தோசம் என்றாலும் கிடைச்சுது. மகளும் மருமகனும் மகள்ட குட்டி மகனும் இங்க இருந்த 6..7 மாதங்கள் உண்மையா ஒரு வித்தியாசமான நாட்களாக தான் இருந்தது. இப்ப அவங்க போட்டாங்க.

ஜயோ ! ! ! போட்டாங்க இனி நான் தனிய தானே என்று கவலைப்பட்டு கொண்டு இருக்கிற ஜீவன் நான் இல்லை. எனக்கு எதையும் தாங்கும் இதயம் ஒன்றை நானே உருவாக்கி வைச்சிருக்கன். எல்லாம் வாழ்க்கையின் பாடங்களில இருந்து வந்தது தான். சோகம் இல்லை சொந்தம் தேவையில்லை என்று வாழுற ஆள் நான். எல்லோர் கூடவும் கதைப்பன். ஆனால் அளவாக தான் கதைப்பன். கண்டால் மட்டும் கதைப்பன். அவளவும் தான். யாரையும் தேடி நான் போனதில்லை. 'என்ன இவனை கன நாளா காணலையே என்ன ஆச்சு?? தனியா இருக்கிற மனுசன்' என்று யாரும் என்னை தேடி வந்ததும் இல்லை. அந்த அளவுக்கு யார் கூடவும் நான் நடந்துகிட்டதும் இல்லை.

'ஆமா உங்களுக்கு ரத்த சொந்தங்கள் யாரும் இல்லையா?? குடும்பம் என்று ஒண்டும் இல்லையா??' என்று யாரும் நினைக்கலாம். 'இருந்திச்சு இப்ப இல்லை' என்று நான் சொல்லுவன். இப்படி நான் தனியா இருக்கிதால எனக்கு கஸ்டம் என்றோ.. கவலை என்றோ... ஏக்கம் என்றோ.. ஏதும் இல்லை. உண்மையில் உறவுகளோட சேர்ந்து இருந்தால் தான் இந்த கஸ்டம் கவலை ஏக்கம் எல்லாம் வரும் என்கிறது என்ர கருத்து.

நான் வாழ்கைல நிறைய விசயங்களை இழந்திட்டு.. சும்மா வீணாண நியாங்கள் கூறிக்கொண்டு வறட்டு கௌரவத்தோட இருக்கிறதா யாரும் நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை. வாழ்க்கையின் முழுமையை என்ட நாளாந்த வாழ்க்கையில நான் காணுறன். யார் என்ன சொன்னாலும் அதைபற்றி எனக்கு கவலையில்லை. ஏன் என்றால் மற்றவங்களுக்காக நான் வாழல, எனக்காகத் தான் நான் வாழுறேன்.

மரத்தடியில இருந்து எனக்குள்ளேயே நானே பேசிட்டு இருந்தன். இப்ப உங்களுக்கு நல்லவே புரிஞ்சிருக்கும் நான் 23..24 வருசமா தனியாவே வாழ்ந்திட்டு, வாழ்க்கையின் முழுமையை காண்கிறேன் என்று சொன்னதின் அர்த்தம். இப்படி வரட்டுகௌரவம், அதுவும் எனக்குள்ளேயே, என்னோடு நான் பேசிட்டு இருக்கிறது என்ர முக்கியமான பொழுதுபோக்கில ஒண்டு.

லொறி ஓடுறது எனது வேலை. நினைச்சதை செய்ய எங்கட வேலையிடத்தில என்னால மட்டும் தான் முடியும். ஏன் என்றால் நான் மட்டும் தான் தனி ஆள் எங்க வேலை இடத்தில. தூர இடங்களுக்கு லோட் எடுத்திட்டு போக கூட நான் தான் ஒத்துக்கிறது. நினைச்ச இடத்தில சாப்பிடுவன். எப்ப பசிக்குதோ அப்ப சாப்பிடுவன். எப்ப தூக்கம் வருதோ அப்ப படுப்பன். எங்கே என்றாலும் படுப்பன். தொடர்ந்து 2..3 கிழமையாக லொறி ஓடுவன். அதில எனக்கு சலிப்பு என்று ஒன்றும் இல்லை. இது எங்க வேலை இடத்தில எல்லாராலும் முடியாது. ஏன் என்றால் அவங்களுக்கு குடும்பம் குட்டி என்று இருக்கும். இரவு எப்படியும் போகணும் வீட்டில மனுசி தனிய.. பிள்ளை தனிய.. பிள்ளைக்கு அது இது... என்று அவங்களுக்கு நிறைய சோலி இருக்கும்.

எனக்கு இது ஏதும் இல்லை... சில நேரங்கள்ல அவங்க வேலைகளை நான் தான் பாக்கிறது. அவங்களுக்குபதிலா நான் லோட் கொண்டு போறது. இதால எங்க முதலாளிக்கும் என்னில நல்ல இஸ்டம். பல நேரங்கள்ல நானா ஏதும் முடிவு எடுத்து செய்திட்டு முதலாளிக்கு போய் சொன்னால் கூட முதலாளி ஏதும் சொல்லுறதில்லை. காரணம் அவருக்கு என்னில ரொம்ப பற்று. முதலாளிக்கு மட்டும் இல்லை. கூட வேலை பார்க்கிறவங்களுக்கும் என்னில பற்று. காரணம் அவங்களுக்கு லீவு வேணும் என்றால் நான் தானே அவங்க வேலையை செய்கிறது.

எல்லோரும் என்னில பாசம். ஆனால் நான் அவங்க பாசத்துக்கு அடிமைப்பட்டது கிடையாது. சாப்பிட கூப்பிடுவாங்க, என்னை தனி ஆள் என்ற படியால். ஆனால் நான் போனதில்லை. எனக்கு பிடிக்கிறதும் இல்லை. அதுக்காக என்னை ஒரு மாதிரியான ஆள் என்று நினைச்சால் அது தப்பு. வேலைஇடத்தில எனக்காக சாப்பாடு குடுத்துவிட்டால் வாங்கி நல்லாவே வெட்டுவன். ஆனால் எதிர் பார்க்கமாட்டன்.

எனக்கு லீவு தேவையில்லைத்தான் இருந்தாலும்... சில வேளைகள்ல ஒரு கிழமைக்கு லீவு போடுவன். வீட்ல தான் இருப்பன். விரும்பின சாப்பாடுகளை நானே சமைச்சு சாப்பிடுவன். அரசியல்ல எனக்கு கொஞ்சம் ஆர்வம் இருக்கு. பேப்பர் சஞ்சிகைகள் வாங்கீட்டு வந்து படிப்பன். வேலைல சரி வீட்ல சரி நல்லா ரெடியோ கேட்பன். சினிமா பாட்டு என்றால் எனக்கு ரொம்ப இஸ்டம். பழைய பாட்டில இருந்து இனிக்கு வந்த பாட்டுவரைக்கும் ஒண்டும் விடாமல் கேட்பன். படம் பார்க்கிறதில்லை நான்.. ஆனால் லீவு நாட்கள்ல எப்பவாவது தியேட்டருக்கு போய் படம் பார்ப்பன். இவைகள் தான் எண்ட தனிமையை இனிமையாக்கிற சில விடயங்கள் என்று சொல்லலாம்.

ஒருவேலையும் இல்லை என்றால் இந்த மரத்தடி சாய்மனைல படுத்துக்கொண்டு எனக்குள்ளேயே நான் வறட்டு கதைகளை பேசிட்டு இருப்பன். மற்றவங்களுக்கும் சொல்லுவன், 'இப்படி நான் தனிமைல இருக்கிறது தான் எண்ட பலம் என்று'

ஆனால் இப்ப கொஞ்ச நாள் எனக்கு வித்தியாசமா... என் கொஞ்சம் சந்தோசமா போய் இருக்கு என்று சொல்லலாம். எல்லாம் என்ட மகள், மருமகன், மகள்டமகன், வந்து நிண்டதுதான். மகளை நான் பிரிஞ்சது அவள் 3 மாத குழந்தையா இருக்கும் போது. ஆரம்பத்தில மகளை பார்க்கணும் என்ற தவிப்பு இருந்ததுதான். ஆனால் பிறகு இருக்கல. இப்ப என்னமா வளர்ந்து நிற்கிறாள்.. இப்ப அவளுக்கு 23.. 24 வயது இருக்கும் என்று நினைக்கிறன்.

" உங்களை யாரோ சந்தில விசாரிக்கினம்.. யாழ்ப்பாணத்தில இருந்து இடம்பெயர்ந்த ஆட்களாம்" என்று பக்கத்து வீட்டு பெடியன் வந்து சொன்ன போது... எனக்கும் யாரோ ஆட்கள் இருக்காங்களா?? என்று போய் பார்த்தன்.

அப்ப ஓடி வந்து என்னை கட்டிபிடிச்சு அழுதவள். 3 மாதத்தில பிரிஞ்சும் அவள் என்னை போட்டோல பார்த்தே அடையாளம் கண்டு பிடிச்சிருக்காள். ஆனால் அவள் வாயால சொல்லும் வரை எனக்கு தெரியாது அவள் யார் என்று. அப்படி ஒரு கல் நெஞ்சுக்காரனா இருந்து இருக்கன் நான். அன்னில இருந்து இன்க்கு அவள் போகுமட்டும் என் மேல அவள் காட்டின அன்புக்கு அளவே இல்லை. எனக்கு அன்பு செய்ய இப்படி ஒரு ஆள் இருக்கா என்று நான் நினைச்சதே இல்லை. அந்த அளவுக்கு அவள் பாசம் என்மேல இருந்தது. இதுவரைக்கும் அவள் பிறக்கிறதுக்கு காரணமா இருந்ததை தவிர நான் அவளுக்காக எதுவுமே செய்யல.

அப்படி ரொம்ப பாசம் அவள் என்மேல. ஆனால் ஒரே ஒரு விசயத்திலதான் எனக்கும் அவளுக்கும் பிரச்சினை வாறது. அவங்க அம்மா பற்றி பேச்சு வந்தால் தான். ஆனால் அப்படி பேச்சு வந்தால் நான் ஒன்றும் பேசுறதில்லை. அவள் பேசுறதை மட்டும் கேட்டுகொண்டிருப்பன். அவள் சொல்லுற விடயங்கள் எல்லாமே எனக்கு சரியப்பட்டதால தான் நான் பேசாமல் இருந்தனோ என்னவோ. எப்பவும் அவள் அவங்க அம்மாவை விட்டு குடுத்து கதைக்கிறது இல்லை.

சில வேளைகளில 'அப்படி உங்க அம்மா நல்லவாவா இருந்தால், அவா நியாயமான ஆளா இருந்தால் உன்கூட சேர்ந்து இங்க வந்திருக்கலாம் தானே.. ஏன் அவ வராமல் உங்களை மட்டும் அனுப்பினா??' அப்படி என்று நினைப்பன். ஆனால் ஏனோ நினைக்கிறதை மகள்கிட்ட சொன்னதில்லை.

என்ட மருகனும் ஒன்னும் குறைஞ்ச ஆள் இல்லை.. மகளோட சரி.. என்னோட சரி நல்ல மாதிரி, தங்கமான ஒரு பெடியன். என்ட வறட்டு கவுரங்களை எல்லாம் எனக்கு முன்னாலேயே ஒரு பயமும் இல்லாமல் சொல்லி பேசுவார். ஆனால் எனக்கு என்னவோ கோபம் வந்ததில்லை. அவர் சொன்னதில நியாயம் இருந்ததால கோபம் வரலையோ என்னவோ நான் கோபப்பட்டதில்லை. ஆனால் அவர் சொன்னதுக்காக என்னில ஒரு மாற்றத்தை காட்டியதும் இல்லை. என்ட பேரன்.. அவனைப்பற்றி சொல்லவே தேவையில்லை. உவடம் எல்லாம் குப்பையாக்கிறதில ரொம்ப கெட்டிக்காரன்... சின்ன பிள்ளைகள் செய்கிற குறும்புகளை பொறுமையோ ஏற்று ரசிக்கிற பாக்கியம் எனக்கு ஒரு பிள்ளை இருந்தும் எனக்கு கிடைக்கல. இருந்தாலும் அந்த இப்ப எனக்கு அந்த குறையில்லை என்றால் அதுக்கு காரணம் அவன் தான் காரணம்.

மகள் போன பிறகு கொஞ்சம் இருந்து பழைய நினைவுகளை அசைப்போட்டது காணும் நாளைக்கு வேலைக்கு போகணும் என்கிறது நினைவுக்கு வர... 'சரி இனி எழும்பி போய் சாப்பிட்டு படுப்பம்' என்று எழும்பி வீட்டுள்ள போனன். வீட்டுக்குள்ள போக வீடு ரொம்ப துப்பரவா இருந்தது. அப்பா தனிய இதேல்லாம் செய்ய மாட்டார் என்று மகளும் மருமகனும் செர்ந்து இனிக்கு காலைல இருந்து துப்பரவு செய்தது தான். ஆனால் மற்றும் படி இப்படி இருக்காது... எண்ட பேரன் எல்லா சாமானும் எடுத்து அங்கே இங்கே என்ரு எறிஞ்சு இருப்பான்.. அதை பொறுக்கிகொண்டு வாறதில தான் எனக்கு ஒரு சந்தோசம். எதோ மனசு கொஞ்சம் ஒரு ஆட்டம் கண்ட மாதிரி இருந்தது.

குசினிக்குள்ள போனன்...குசினிக்குள்ள நான் உள்ளட்டு ரொம்ப நாள். மகள் நிண்ட நாள்ல ஒரு நாள் தன்னிலும் என்னை ஒரு வேலை செய்ய அனுமதிச்சதில்லை அவள். குசினிக்குள்ள போக மகள் உள்ள நிண்டு "போய் இருங்கப்பா நான் சாப்பாடு கொண்டு வாறன்" என்று சொல்லுற மாதிரி ஒரு பிரமை. போய் சாப்பாட்டை பார்த்தன். எனக்காக சமைச்சு மூடி வைக்கப்பட்டு இருந்திச்சு. இனிக்கு தானே கடைசி.. இனி வேலையால வந்து நான் தானே சமைக்கணும் என்று மனசு ஏதோ சோகமா ஃபில் பண்ணி சொல்லுற மாதிரி பட்டுது.

'அட நீயா இப்படி சோகமா கதைக்கிறது... நீ எம்மாம்ப்ட்ட ஆளடா?? உன்ட கொள்கை எல்லாம் எங்கே?? ஏதோ பந்தாவா நிறைய எல்லாம் சொன்னியே... அது எல்லாம் எங்கே போட்டுது?? ' என்று என் மனசைப்பார்த்து நானே கேட்டன். சோகம் வந்தா கதைக்காமல் இருக்கிறது நல்லது, என்ட மனசும் அப்படித்தான்.. நான் சொன்னதுக்கு பதில் ஒன்னுமே சொல்லல. சாப்பாட்டை போட்டு சாப்பிட போனன். ஆனால் என்னால முடியல, இனந்தெரியாத சோகம் ஒன்று என்னை கஸ்டப்படுத்திச்சுது. சாப்பிட மனசு வரல.

" அப்பா நீங்க இனியாவது வந்து எங்க கூட இருங்களேன்.. உங்க கடைசி காலத்தில தனிய இங்க இருந்து என்னத்தை பண்ண போறிங்கள்?? " என்று இப்ப கடைசி கிழமையா அடிக்கடி என்ட மகள் கேட்டது நினைவில வந்து வந்து போச்சுது. ஆனால் அதுக்கு நான் ஒரு பதிலும் சொல்லல, மருமகனும் வந்து கேட்டுப்பார்த்தவர், ஆனால் அதுக்கு உருப்படிய நான் ஒரு பதிலும் சொல்லல, என்ட குணமும் அவைக்கு நல்லவே தெரியும், நான் இப்படி இருக்கிறதுக்கு நான் பட்ட கஸ்டங்களும் காயங்களும் தான் காரணம் என்று அவைக்கு தெரிஞ்சிருக்கணும் என்று நினைக்கிறன்.

கடைசியா போகும் போதும் மகள் தன்ட மகனிட்ட சொல்லி கேட்டது " அப்பப்பாவை எங்க கூட இருக்க சொல்லி கேள்" என்று. ஆனால் அப்ப கூட எனக்கு மனம் விட்டு கொடுக்கல, அந்த அளவுக்கு கல் நெஞ்சகாரன் நான். உண்மையில நானும் எல்லோரையும் போலத்தான் மற்றவங்களை புரிஞ்சுக்கிற ஒரு ஆளா இருந்தனான். ஆனால் இப்ப ஏனோ நான் அப்படி இல்லை.

மனசில ஏதோ ஏதோ நினைவுகள் எல்லாம் வந்து போச்சுது, இந்த 20 வருசத்தில நினைவுக்கு வராத பழைய நினைவுகள் எல்லாம் எனக்கு வந்து போச்சுது, ஏனோ மனசு வலிக்கிற மாதிரி இருந்தது, உறுதியா இருந்த என்ட மனசு இப்ப ஏதோ என்ன செய்கிறதென்டு அறியாமல் தவிக்கிற மாதிரி இருந்திச்சு. இப்ப எனக்கு என்ட மகள் மேல கோபம் வாற மாதிரி இருந்தது. இருட்டில கண்ணை இருட்டுக்கு பழக்கிட்டு போய் கொண்டிருந்த என்னை கொஞ்ச நேரம் முன்னால வந்து லைட்டைக் காட்டி சந்தோசப்படுத்திட்டு.. திருப்ப தவிக்க விட்ட மாதிரி இருந்தது.

மனசை கொஞ்சம் கட்டுப்படுத்திட்டு படுத்திடுவோம்.. நாளைக்கு வேலைக்கு போய் வர எல்லாமே சரிவரும் என்று நினைச்சிட்டுபடுக்க போனேன். என்ட ரூம்ல போய் உடுப்பு மாத்த உடுப்பை பார்த்த போது. கீழ ஒரு பாக்ல என்ட உடுப்பு எல்லாம் அடுக்கி வைச்சிருந்திச்சு. அது ஒண்டுமில்ல. நான் பதில் சொல்லாவிட்டாலும் போகும் போது நானும் சேர்ந்து அவங்ககூட வருவன் என்று நினைப்பில என்ட மகள் என்ட உடுப்பு எல்லாம் எடுத்து பாக்ல றெடியா அடுக்கி வைச்சு இருந்தாள்.

எனக்கு எல்லா நினைப்புகளும் மாறி மாறி வர.. அப்படியே உடுப்பு பாக்ல சாய்ஞ்சு கொண்டே யோசிச்சன். இப்ப நான் திரும்ப போனால் என்ன நடக்கும் என்று ஒரு முறை நினைச்சுப்பார்த்தன். அதை என்னால ஜீரணிக்கமுடியாமல் இருந்தது. ஆனால் போகாமல் இனியும் இங்கே தனிய இருக்கிறதை நினைச்சுப்பார்க்கவே முடியல. மகள் சொன்ன வார்த்தைகளை நினைச்சுப்பார்த்தன்.

இப்ப கூட போனால் மகள் கூட சேர்ந்து போகலாம் பஸ்ஸுக்கு வெயிட் பண்ணி கொண்டு இருப்பாங்க போய் சேர்ந்துக்கலாம் என்று மனசு சொல்லிச்சு. இவளவு காலமும் என்ட சொல்லு கேட்ட என்ட மனசு எப்ப எனக்கே கட்டளை போட பாக்கை எடுத்து க்கொண்டு மகள் பஸ்ஸுக்கு வெயிட் பண்ணுற இடம் நோக்கிப் புறப்பட்டேன்.

(முற்றும்)

எழுத்துப்பிழைகள், மற்றும் ஏனைய பிழைகளை சுட்டிக்காட்டவும் :roll: :roll:

குற்றம் புரிந்தவன்

இனிக்கு சனிகிழமை...

வழமையா சனி எண்டால் நான் எழும்ப 12... 1 மணி ஆகும். ஆனால் இப்ப 8 30க்கே வேளில சொப்பிங் போறதுக்கு ஆயத்தமாகி கொண்டு இருக்கன்.

அப்படி என்ன இனிக்கு விசேசம் எண்டு நினைக்கிறிங்களா??

எனக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகன்.. ஒரு மகள். மாததில ஒரு சனி கிழமை நான் அவங்க கூட சொப்பிங் போவன். சொப்பிங் முடிச்சிட்டு... மதியம் எங்காவது ரெஸ்ராரண்ல சாப்பிடுவம். சாப்பிட்டு முடிச்ச பிறகு கூட வீடு திரும்ப மனம் இருக்காது எங்களுக்கு... படம் பார்க்க தியேட்டர் போவம். அல்லது பார்க் பீச் எண்டு எங்காவது போவம். நாங்க வீடு திரும்பும் போது எப்படியும் நல்ல இருட்டி இருக்கும்...

ம்ம்ம்ம்......... அந்த சனி கிழமை இனிக்கு தானுங்க.

வேலை களைப்போட... பண கஸ்டத்தில இருக்கிற எல்லா அப்பாக்களுக்கும் இது கஸ்டம் தானுங்க. ஆனால் எனக்கு அப்படி இல்லை. இந்த சனிக்காகவே நான் காத்திருப்பன்... அப்படி ஒரு விருப்பம் எனக்கு. எனக்கு பண கஸ்டம் இல்லைங்க.. ஆனால் வேலை களைப்பு ரொம்பவே இருக்கு... அதனால வழமை மாதிரி இல்லாமல் வேளைக்கு எழும்புறது மட்டும் ரொம்ப கஸ்டம் பாருங்க....

இப்ப கூட பாருங்க... நான் ரொம்பவே லேட்... எண்ட மகன் ரெடி ஆகிட்டு கோல் பண்ணிட்டான். அதுக்கு பிறகு தான் அவசரமா எழும்பி ரெடி ஆகிட்டு இருக்கன்.

அவசரமா ரெடி ஆகிட்டு... கார்ல ஏறி உக்காந்து... காரை எடுத்தன்... டீ கூட குடிக்கல... என் எண்டால் எண்ட மகன் கொஞ்சம் கோபகாரன். நேற்றே சொன்னவன் வழமை மாதிரி லேட் ஆக கூடாது எண்டு. நானும் ப்ரொமிஸ் பண்ணினான். ஆனால் அதை காப்பாத்த முடியல. சாலை முடக்கில இருந்த பெட்டோல் செட்ல டீ குடிப்பாமா எண்டு நினைக்கும் போது...

மகன் 2 ஆவது தடவையா கோல் பண்ணினான். 'அப்பா... இன்னும் வரல.. என்னப்பா??'

ம்ம்ம்.... டீ குடிக்கிற பிளானை விட்டிட்டு... கார் ஐ விரைவு படுத்தினன்.

இப்ப உங்களுக்கு ஒரு குழப்பமா இருக்கும் என்ன... அந்த கேள்விக்கு விடை தான் இப்ப சொல்ல போறன். எண்ட பிள்ளைகள் என்கூட இல்லை. அவங்க அம்மா கூட இருக்காங்க. மாததில ஒரு நாளைக்கு அவங்க கூட பழகிறதுக்கு எனக்கு அனுமதி இருக்கு. உங்களுக்கே ரொம்ப கஸ்டமா இல்ல... என்ன பிள்ளைங்க கூட பழகிறதுக்கு எனக்கே கட்டுப்பாடு... ஒரு பக்கம் கஸ்டமா இருந்தாலும்... மற்ற பக்கம் எண்ட கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை தான் எண்ட இந்த நிலைக்கு காரணம்.

என்னில ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க. நானா எதையும் தேடி போனது கிடையாது... ஆனால் எதாவது தானா வந்தால்.. அதை விலகி போக எனக்கு தெரியாது. இது தானுங்க எண்ட கெட்ட பழக்கம்.

குடும்ப வாழ்க்கை ல பெண்களுக்கு ஆண்கள் மேல பிடிக்காத 2 விசயம் இருக்குங்க. ஒண்டு மது பழக்கம். இது எனக்கு ரொம்பவே இருந்திச்சுது. அதை கட்டுபடுத்த எண்ட மனைவி பல முறை முயற்சி செய்தும் முடியல. ஆனால்... எண்ட இந்த பழக்கத்துக்காக அவள் என்னிக்குமே உண்மையாக கோபிச்சதும் கிடையாது எண்டு தான் நான் சொல்லுவன். ஏன் எண்டால் நாம காதலிக்கும் போதே எனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது அவளுக்கு நல்லாவே தேரியும். எங்க காதலுக்கு அவங்க அம்மா அப்பா எதிர்ப்பு தெரிவிச்சதுக்கும் எண்ட இந்த குடிப்பழக்கம் தான் காரணம். அவங்க அப்பா அம்மாவையும் எதிர்த்து அவ என்கூட வந்த்தப்போ நான் அவளுக்கு ப்ரொமிஸ் பண்ணினன். என்னன்னு??? இந்த குடிப்பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமா விட்டுறன் எண்டு.

ஆனால் ப்ரொமிஸ் பண்ணினா அதை காப்பாத்துற பழக்கம் எனக்கு இல்லைங்க... அதனால எண்ட குடிப்பழக்கத்தை என்னால விட முடியல.

அப்ப எதுக்காக உங்ககுள்ள இந்த பிரிவு?? அப்படி எண்டு நீங்க நினைக்கிறிங்க அப்படித்தானே... என்னோட வேலை இடத்தில ஒரு பொண்ணோட தானாகவே எனக்கு ஒரு பழக்கம் கிடைச்சுது. அந்த பழக்கத்தில இருந்து நான் விலகி போக முடியல. இது தாங்க.... நம்ம பிரிவுக்கு காரணம்.

இப்ப என் மேல உங்களுக்கு கோபமா இருக்கும் என்ன??

சரிங்க.. பிழை விடுறது மனித இயல்பு தானே.. இந்த விசயம் எண்ட மனுசிக்கு தெரிஞ்சப்பவே நமக்குள்ள சண்டை ஆரம்பிச்சுது. அப்ப எங்களுக்கு ஒரு பிள்ளை தான். 2 ஆவது மகள் மனுசிட வைத்தில இருந்தாள். சண்டை ஆரம்பிச்சப்பவே... நான் என்னை திருத்திக்க தொடங்கினன். பொண்ணோட ஏற்பட்ட பழக்கத்தை முழுவதுமாகவே நிறுத்தினன். என்னை மன்னிச்சு... என்கூட பழையமாதிரி வாழும்படி என் மனைவிகிட்ட வெகுவாக கெஞ்சினன். ஆனால் எண்ட குடிப்பழக்கத்தை சகித்து கொண்ட அளவுக்கு... என்னோட இந்த நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியல எண்டு நினைக்கிறன். அந்த போண்ணோட இருந்த பழக்கத்தை மட்டும் அல்ல... எண்ட குடிப்பழக்கத்தையும் நான் சரியாக குறைச்சு அவள் என்னை ஏற்றுக்கொள்ளும்படியாக நடந்துகிட்டன்.

ஆனால் நடந்தது எல்லாம் நல்லாவே நடக்கல. என்னோட உண்மையானா முயற்சிக்கு பலன் கிடைக்கல. மாறாக அவளுக்கு என்மேல சந்தேகம் தான் கூடிச்சுது. அதன் விளைவு.... எண்ட மகள் பிறக்கிற நேரத்தில அவள் 2 பிள்ளைகள் கூடவும் தனிகுடித்தனம் போற மாதிரி முடிஞ்சுது.

நான் என்னங்க செய்ய முடியும்?? அப்பல இருந்து இப்ப வரைக்கும் நான் செய்த பிழைக்கு ரொம்ப அதிகமாகவே தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கன்.

அவள் வைத்தில பிள்ளையோட தனிக்குடித்தனம் போனபோது... நான் எவளவோ தடுத்துப்பார்த்தன். ஆனால் அதுக்கு பலன் கிடைக்கல. அவளும் ஒரு நேர்ஸாக இருந்த படியால்.. பிரசவம் பற்றி கவலைப்படத்தேவை இல்லை எண்டு மனசுக்குள்ள நினைச்சிகிட்டன். அதுக்கு பிறகு நடந்த பல நிகழ்வுகள் நாம சேருறதுக்கு சாதகமா அமையல... பதிலுக்கு... ஊடலும்... புரிதுணர்வு இல்லாததால ஏற்பட்ட கோபமும். நமக்குள்ள சண்டையும்.. பிரிவையும் தான் கூட்டிச்சுது. என்னோட பிழையால தானே இது எல்லாம் எண்டு நீங்க நினைக்கிறிங்க. அது சரி. ஆனால்... அந்த டைம்ல... நான் ஒரு முழுமையான கட்டுப்பாடான ஆளா என்னை மாத்திக்கிட்டன். தேவை இல்லாத தொடர்புகள்... குடிப் பழக்கம் எல்லாத்தையும் அறவே விட்டிருந்த்தன். ஆனால் உடைஞ்சு போன கண்ணாடியை ஒட்ட முடியாது எண்டு அவள் தான் என்கூட திரும்பவும் சேரல.

பிழை செய்தது நான் தானே.. அதனால.. நானே என்னை மாத்திகிட்டு.. அவள் கிட்ட கேட்டன்.. இதை விட உனக்கு என்ன வேணும் எண்டு... ' உன்கிட்ட இருந்து டைவோர்ட்சும்.. என் பிள்ளைகளும் எனக்கு வேணும்' எண்டு அதே கோபத்தோட கேட்டா. அதிலையும் அவளே ஜெயிச்சா... நான் தோத்திட்டன். அவள்கூட மட்டும் இல்லீங்க. என் வாழ்க்கையிலும் தான்.

பிளாஸ்பாக்கை விட்டு விட்டு கதைக்கு வாரன்...

கார் நிண்ட விதத்திலயே நான் எவளவு வேகமா வந்திருக்கன் எண்டு அவளுக்கு புரிஞ்சிருக்கவேணும். வழமையா 'எப்படி இருக்கீங்க?' எண்டு கேட்கிறவள். அதை கட் பண்ணீட்டு... ஒரு விதமான பார்வையுடன் பிள்ளைகளை கார்ல ஏத்திவிட்டாள். நான் எப்ப அவளை பார்த்தாலும்.. அவை லவ் பண்ணும் போது எப்படி பார்த்தனோ... அப்படி தானுங்க பார்க்கிறனான்.

'செய்யுறது எல்லாம் செய்திட்டு என்ன லவ் பார்வை' அப்படி நீங்க நினைக்கலாம். ஆனால் பாருங்க... பிழையை உணர்ந்திட்டு நான் எப்ப மாறினனோ.. அன்னில இருந்து இனிக்கு வரை நான் எந்த ஒரு போண்ணோடையும் தொடர்பு வைச்சுக்கல. இதை அவளே நம்பல.. நீங்க நம்ப போறிங்களா என்ன?? ஆனால் அது தான் உண்மை.

பிள்ளைங்க ஏறினதும் காரை எடுத்திட்டே.. பிள்ளைங்க கூட கதைச்சிட்டே காரை ஓட்டினன்.

சோக கதையை விட்டிட்டு.. என்னுடைய சந்தோசமான கதையையும் கொஞ்சம் கேழுங்க. எனக்கு பிள்ளைங்க எண்டால் ரொம்ப விருப்பம். மகனுக்கு இப்ப 13 வயதாகுதுங்க... அவன் ரொம்ப கேட்டிகாரன். எண்ட பிள்ளையாச்சே அப்படித்தானே இருப்பான். ஒரு நாளைக்கு 10 தரம் எனக்கு போன் பண்ணுவான். அதுக்கு அவனுக்கு யாருமே தடை இல்லை. அன்னிக்கு அவன் செய்த வேற்றிகரமான விசயம் என்ன எண்டாலும் எனக்கு சொல்லுவான். நான் அவண்ட அம்மாக்கு செய்த பிழையை அவனுக்கு செய்ய விருப்பம் இல்லை. என்னதான் நான் பிஸியா இருந்தாலும் அவனுக்கு தான் முதல் உரிமை குடுத்து.. அவன் சொல்லுறதை கேட்பன். இன்னும் அவனுக்கு ஊக்கம் குடுப்பன். ஆனால் எல்லா பிள்ளைகளை மாதிரியே அவனுக்கு அட்வைஸ் சொன்னா பிடிக்காது. அதுவும் நான் சொன்னா கேட்கவே மாட்டான். நான் அட்வைஸ் சொன்னால்... அதை கேட்க விருப்பமில்லாத அவன் பதில் என் பிழைகளை சுட்டிக்காட்டுறத மாதிரியும்... அட்வைஸ் சொல்ல அம்மாக்கு மட்டும் தான் உரிமை இருக்கு என்கிறது மாதிரியும் இருக்கும். பறவாய் இல்லீங்க... அவன் எண்ட அட்வைசை கேட்கா விட்டாலும்... தன்னுடைய நாளாந்த விடயங்களை என்கூட பகிர்ந்து கொள்ளுறதே ரொம்ப சந்தோசமா நான் எடுத்துக்கிறன்.

மகளுக்கு வயது 9. அதிகமா நம்ம பிரச்சினையை புரிஞ்சுக்கிற மனசு அவளுக்கு இல்லாவிட்டாலும்.. அவள் அண்ணனை மாதிரி இல்லாம. அவள் அம்மா மாதிரி இல்லாம... அவள் நடந்துக்கிறது எனக்கு ரொம்பவே மனசுக்கு ஆறுதலா இருக்கும்.

தொடரும்....

கொஞ்சம் உணர்வு பூர்வமா முடிப்பம் எண்டு நினைச்சன். எனோ... முடியல. நீங்களே முடித்து வையுங்கள்... நன்றி

Google street view

நாம விரும்புற ஒரு இடத்தை மற்றவங்க கூட பகிர்ந்து கொள்ள Google street view எப்படி உதவி செய்யுது எண்டு பாருங்க. நான் இருக்கிற இடத்தை இதில பகிர்ந்து கொண்டிருக்கன். படத்தில் mouseஐ வைத்து படத்தை அசைப்பதன் மூலம்.. நீங்கள் நேராக பார்ப்பது போல பார்க்கலாம்.


Grotere kaart weergeven

Naan Unna Nenachen....

நித்தம் நித்தம் பூத்தாயே...
நான் பறிச்ச் ரோசாவே...
இனி எப்போ வரும் பூவாசம்??

Antru Eluthiya Kavithai - 15 April 2006 - 02:46 PM

காதல் நினைவினிலே
காதலி உன்னை பிரிகையிலே
கவிதை ஒன்று எழுதிவிட்டு
கன்னி உன் கண்படவே
காகிதத்தில் மறைத்துவிட்டு
காத்திருந்தேன் உன் பதில்க்காய் :?

கண்டு விட்ட கவிதையினை
கடைசிவரை படிக்கு முன்னே
கன்னியவள் என்னிடத்தில்
கேள்வி ஒன்றை கேட்டு விட்டாள்
"கவி படைத்தாய் நம் காதலுக்கா?? - ஏன்
காட்டவில்லை என்னிடத்தில்??"

உயிர் கலந்த காதலியே
உண்மையினை உரைத்திடுவேன்
உனக்காய் இக்கவி படைத்தேன் - நம்
உறவில் உறுதி ஊட்டுதற்காய்

படித்து அவள் முடிக்கும்வரை
பார்த்திருந்தேன் பாவி இவன் :?
பாவை என்ன பறைவாளென்று ! ! !
பார்வை ஒன்று பார்த்துவிட்டு
பிடித்திருக்கு என்று சொன்னாள்
பாதியிலே முடித்துவிட்டாள்

பகல் பொழுது பிரிந்த பின்னே
பரிசு எனக்கு தந்திடுவாள்
ஃபண்ணாய் ஏதும் பண்ணிடுவாள்
பார்த்திருந்தேன் பாவி இவன் :?

ஏக்கத்துடன் நானிருக்க
தூக்கம் என்று சொல்லிவிட்டு
தூங்க இப்போ சென்று விட்டாள் - என்
துடிப்பறியா துணைவி இவள்...