Naan Unna Nenachen....

நித்தம் நித்தம் பூத்தாயே...
நான் பறிச்ச் ரோசாவே...
இனி எப்போ வரும் பூவாசம்??

Antru Eluthiya Kavithai - 15 April 2006 - 02:46 PM

காதல் நினைவினிலே
காதலி உன்னை பிரிகையிலே
கவிதை ஒன்று எழுதிவிட்டு
கன்னி உன் கண்படவே
காகிதத்தில் மறைத்துவிட்டு
காத்திருந்தேன் உன் பதில்க்காய் :?

கண்டு விட்ட கவிதையினை
கடைசிவரை படிக்கு முன்னே
கன்னியவள் என்னிடத்தில்
கேள்வி ஒன்றை கேட்டு விட்டாள்
"கவி படைத்தாய் நம் காதலுக்கா?? - ஏன்
காட்டவில்லை என்னிடத்தில்??"

உயிர் கலந்த காதலியே
உண்மையினை உரைத்திடுவேன்
உனக்காய் இக்கவி படைத்தேன் - நம்
உறவில் உறுதி ஊட்டுதற்காய்

படித்து அவள் முடிக்கும்வரை
பார்த்திருந்தேன் பாவி இவன் :?
பாவை என்ன பறைவாளென்று ! ! !
பார்வை ஒன்று பார்த்துவிட்டு
பிடித்திருக்கு என்று சொன்னாள்
பாதியிலே முடித்துவிட்டாள்

பகல் பொழுது பிரிந்த பின்னே
பரிசு எனக்கு தந்திடுவாள்
ஃபண்ணாய் ஏதும் பண்ணிடுவாள்
பார்த்திருந்தேன் பாவி இவன் :?

ஏக்கத்துடன் நானிருக்க
தூக்கம் என்று சொல்லிவிட்டு
தூங்க இப்போ சென்று விட்டாள் - என்
துடிப்பறியா துணைவி இவள்...